தமிழ்நாடு

பிரதமர் மோடியால் தமிழ் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம்- ராஜ்நாத் சிங் பேச்சு

Published On 2024-04-08 09:59 GMT   |   Update On 2024-04-08 09:59 GMT
  • திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
  • ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.

திருவாரூர்:

நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ரமேஷை ஆதரித்து திருவாரூரில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

* உலகின் பழமையான மற்றும் அழகான மொழிகளில் ஒன்று தமிழ்.

* ராஜ ராஜசோழன், ராஜேந்திர சோழனின் பூமியில் இருப்பதில் மகிழ்ச்சி.

* திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

* தமிழ்நாட்டிற்கு வெளியே யாருக்கும் செங்கோல் என்ற வார்த்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

* செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி.

* பிரதமர் மோடியால் உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

* ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.

* பனாரஸ் பல்கலையில் தமிழ் ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது.

* 75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

* மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

Tags:    

Similar News