தமிழ்நாடு

மத்திய மந்திரி பியூஷ்கோயல் இன்று மாலை பிரேமலதா விஜயகாந்தை சந்திக்கிறார்

Published On 2024-01-08 07:31 GMT   |   Update On 2024-01-08 07:50 GMT
  • சென்னை வந்துள்ள மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • சென்னையில் முகாமிட்டுள்ள பியூஷ் கோயல் பா.ஜனதா கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான 3-வது அணியை அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

இந்த அணியில் பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளையும் இணைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சென்னை வந்துள்ள மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொண்டார்.

இன்றும் சென்னையில் முகாமிட்டுள்ள பியூஷ் கோயல் பா.ஜனதா கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று மாலையில் பியூஷ் கோயல் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு செல்கிறார். அங்கு பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது கூட்டணி தொடர்பாகவும் பேச வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News