தமிழ்நாடு செய்திகள்

தேர்தலில் போட்டியா? அண்ணாமலை விளக்கம்

Published On 2024-03-01 15:47 IST   |   Update On 2024-03-01 15:47:00 IST
  • பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன்.
  • எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் கரூர் அல்லது கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை அளித்த விளக்கம் பின்வருமாறு:-

* கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன்.

* கட்சி தலைமை உத்தரவிட்டால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

* பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன்.

* கட்சி தலைமையின் முடிவு எனது முடிவு.

* எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

Tags:    

Similar News