தமிழ்நாடு

அவினாசி அருகே ரூ.1கோடி ஹவாலா பணம் பறிமுதல்?

Published On 2023-06-25 05:57 GMT   |   Update On 2023-06-25 05:57 GMT
  • பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
  • வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அவினாசி:

திருப்பூா் மாவட்டம் பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த 2பேர் பழங்கரை பிரிவு அருகே இறங்கினா். இதையடுத்து, போலீசாா் அவா்கள் இருவரும் கொண்டு வந்த கைப்பைகளில் சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 கோடி இருந்தது தெரியவந்தது. அப்பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் வேலூா், சைதாப்பேட்டையை சோ்ந்த ஆரீப் (வயது 47), பொன்னியம்மன் நகரை சோ்ந்த அப்துல் காதா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags:    

Similar News