தமிழ்நாடு செய்திகள்

கூட்டணிக்கு யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: ஜெயக்குமார்

Published On 2024-03-05 14:11 IST   |   Update On 2024-03-05 14:11:00 IST
  • ஜி.யு.போப் பற்றி கவர்னர் தேவையற்ற கருத்தை கூறி உள்ளார்.
  • அதிமுகவோடு வந்தால் எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி செல்லலாம்.

சென்னை:

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜி.யு.போப் பற்றி கவர்னர் தேவையற்ற கருத்தை கூறி உள்ளார்.

அதிமுகவின் போராட்டத்தை திசை திருப்பவே கவர்னர் அவ்வாறு பேசி உள்ளார்.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பது கவர்னர் பேச்சு மூலம் நிரூபணமாகிறது.

31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்.

அதிமுகவோடு வந்தால் எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி செல்லலாம் என்று கூறினார்.

Tags:    

Similar News