தமிழ்நாடு

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-12-18 12:39 GMT   |   Update On 2023-12-18 12:39 GMT
  • மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க முடிவு.
  • பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, கோவையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிகடையே, மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கவும், தென் மாவட்ட மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News