தமிழ்நாடு செய்திகள்
பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி?
- அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்பட்டது.
- பா.ஜக. - பா.ம.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்பட்ட நிலையில், பா.ஜக. - பா.ம.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
12 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை இடத்தை பா.ம.க. கேட்பதாகவும், 7 இடங்களை ஒதுக்கீடு செய்ய பா.ஜ.க. முன்வரும் நிலையில், இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.