தமிழ்நாடு

பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர டாக்டர் ராமதாஸ் எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை

Published On 2024-03-19 06:28 GMT   |   Update On 2024-03-19 06:28 GMT
  • பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது.
  • பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பா.ம.க. முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் நானும் தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தோம்.

தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் ராமதாஸ் வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News