செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை
தொடர்ந்து 6-வது நாளாக கனமழை பெய்வதால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
கடலூர்:
வங்ககடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக நீடித்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக பலத்த மழை பெய்துவந்தது. நேற்று மழை சற்று குறைந்திருந்தது.
6-வது நாளான இன்று காலை மீண்டும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழை பெய்தது.
இதனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், நெல்லிக் குப்பம், வண்டிபாளையம், திருப்பாதிபுலலியூர், முதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஆறு போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் மழைவெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் பரபரப்பாக காணப்படும் கடலூர் சாலகள் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆறுகளின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு பலகிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து உள்பட பல்வேறு பயிர்கள் மழைவெள்ளத்தினாள் சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து 6-வது நாளாக கனமழை பெய்வதால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி உள்ளதால் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து தீவுகளாக காட்சியளிக்கிறது.
வங்ககடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக நீடித்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக பலத்த மழை பெய்துவந்தது. நேற்று மழை சற்று குறைந்திருந்தது.
6-வது நாளான இன்று காலை மீண்டும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழை பெய்தது.
இதனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், நெல்லிக் குப்பம், வண்டிபாளையம், திருப்பாதிபுலலியூர், முதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஆறு போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் மழைவெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் பரபரப்பாக காணப்படும் கடலூர் சாலகள் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆறுகளின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளை மூழ்கடித்தபடி மழைவெள்ளம் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு பலகிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து உள்பட பல்வேறு பயிர்கள் மழைவெள்ளத்தினாள் சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து 6-வது நாளாக கனமழை பெய்வதால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி உள்ளதால் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து தீவுகளாக காட்சியளிக்கிறது.