செய்திகள்

சாந்தோமில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலி

Published On 2019-05-13 09:04 GMT   |   Update On 2019-05-13 09:04 GMT
சாந்தோமில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை மயிலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26). இவரது நண்பர்கள் வெங்கடேஷ் (28), பாரதி ராஜா (26), பாவாடை ராஜன் (22).

இவர்கள் 4 பேரும் நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றனர். இரவு 12 மணியளவில் அவர்கள் சாந்தோம் பாபநாசம் சிவன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென்று மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் விஷ்ணு, வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பாரதிராஜா, பாவாடை ராஜன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News