செய்திகள்

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆசை பலிக்காது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Published On 2019-04-15 10:16 GMT   |   Update On 2019-04-15 10:16 GMT
மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆசை பலிக்காது என்று திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #mkstalin

திண்டுக்கல்:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் மக்களின் ஆதரவை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எனவே மு.க. ஸ்டாலினின் முதல்- அமைச்சர் ஆகும் ஆசை பலிக்காது.

தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்துக்கு தீ வைத்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வன்முறை ஆட்சி செய்து மக்கள் மனதில் தீ வைத்தது தி.மு.க. தான். மேலும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, சாதி, மத கலவரம் ஆகியவை ஏற்பட காரணமும் தி.மு.க. தான்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.க. தான். அந்த தடையை தகர்த்தெறிந்து தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #opanneerselvam #mkstalin

Tags:    

Similar News