தமிழ்நாடு செய்திகள்

தமிழின சொந்தங்களான நம்மை மொழியும், இனமும் உணர்வால் இணைக்கிறது - மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-12 12:20 IST   |   Update On 2026-01-12 12:20:00 IST
  • வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை.
  • மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் தி.மு.க.

சென்னை:

சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது நாளாக நடைபெறும் அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

* நாடுகளும், கடல்களும் பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது.

* திராவிட மாடல் அரசு அமைந்ததும் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது.

* வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வாழ்க்கை தேடிச் சென்றவர்கள் இல்லை, அந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள்.

* வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை.

* நம்மை யாராலும் எதனாலும் பிரிக்கமுடியாது. பல்லாயிரம் ஆண்டு கால சொந்தம், இன்னும் பல ஆண்டுகள் தொடரும் சொந்தம்.

* வாழ்வதும், வளர்வதும் தமிழனும், தமிழுமாய் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

* வெளிநாடுகளிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

* இலங்கையில் அறிமுகமாகும் புதிய அரசியலமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பாதிக்கக்கூடாது என வலிறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

* மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் தி.மு.க.

* தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும். 2030-ம் ஆண்டை மனதில் வைத்து உங்க கனவ சொல்லுங்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News