செய்திகள்

மரணம் அடைந்த 5 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Published On 2018-11-02 08:06 GMT   |   Update On 2018-11-02 08:06 GMT
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த 5 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை புறநகர், பூந்தமல்லியில் தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்த சதீஷ், கடலூர் மாவட்டம், முதுநிலை தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்கள்.

சாத்தான்குளத்தில் யந்திர கம்பியர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த திருமலைராஜ், திண்டுக்கல் மாவட்டம், தீத்தடுப்புக் குழு, நிலைய அலுவலர் சுந்தர மூர்த்தி, கோவை அன்னூரில் தீ அணைப்பாளர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த தீயணைப்பாளர் மற்றும் யந்திர கம்பியர் ஓட்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மேற்கண்ட ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News