செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 13-ந்தேதி விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அடுத்த மாதம்(நவம்பர்) 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ -மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது.
இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. எனவே மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக டிசம்பர் 8-ந்தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அடுத்த மாதம்(நவம்பர்) 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ -மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது.
இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. எனவே மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக டிசம்பர் 8-ந்தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.