செய்திகள்

எத்தனை சிபிஐ சோதனை நடந்தாலும் அதிமுக யாரிடமும் பணியாது - துணை சபாநாயகர் பேச்சு

Published On 2018-09-08 15:16 IST   |   Update On 2018-09-08 15:16:00 IST
தமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனை நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். #DeputySpeaker
கோவை:

கோவையில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

குட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில் நடந்த சிபிஐ சோதனைகள் பற்றி பேசிய அவர், தமிழகத்தில் எத்தனை சிபிஐ சோதனைகள் நடைபெற்றாலும் அதிமுக யாரிடமும் பணியாது என தெரிவித்தார்.



‘அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்போம். ஜெயலலிதாவால் பத்தாண்டு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட தினகரன் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார்’ என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். #DeputySpeaker
Tags:    

Similar News