விளையாட்டு

உலகக் கோப்பையை விட ஐபிஎல்-ஐ வெல்வது கடினம்: சவுரவ் கங்குலி

Published On 2023-06-12 19:28 GMT   |   Update On 2023-06-12 19:29 GMT
  • உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.
  • ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்தியா தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சர்ச்சை கருத்துகளும் பரவிய வண்ணம் உள்ளது.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:-

உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது. ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளுக்கு பிறகுதான் பிளே ஆஃப் விளையாட முடியும்.

ஆனால், உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.

ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News