கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2025-10-05 07:46 IST   |   Update On 2025-10-05 07:46:00 IST
  • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும்.
  • பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது.

13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், தீப்தி சர்மா, அமன் ஜோத் கவூர்,ஹார்லீன் தியோல், தீப்தி சர்மா, சினே ராணா , ஸ்ரீ சரணி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோதுவது இது 12-வது முறையாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது. நாளையும் இந்தியாவின் வெற்றி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News