சிராஜ் அவுட் ஆனதை எப்படி உணர்ந்தீர்கள்?: மன்னர் சார்லசுக்கு பதிலளித்த சுப்மன் கில்
- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
- வெற்றிக்காக ஜடேஜா இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
லண்டன்:
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. ஜடேஜா வெற்றிக்காக இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி வீராங்கனைகள் நேற்று இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லசை, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுசில் சந்தித்துப் பேசினர்.
பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, இந்திய கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மன்னருடனான சந்திப்பு குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:
மன்னர் சார்லசைச் சந்தித்தது வியப்பாக இருந்தது. எங்களிடம், 'கடைசி பேட்டரான சிராஜ் அவுட்டானது துரதிருஷ்டவசமானது. பந்து உருண்டு சென்று ஸ்டம்சை தகர்த்தது. உங்கள் உணர்வு எப்படி இருந்தது?' என கேட்டார்.
இதற்கு, 'லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டவசமானது. அடுத்த இரு போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்' என தெரிவித்தோம்.
மற்றபடி லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி 3 நாளில் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்தது. இதுபோன்ற ரசிகர்கள் கிடைத்துள்ளது உண்மையில் எங்களது அதிர்ஷ்டம் தான். போட்டி 5-வது நாள் கடைசி வரை சென்று 22 ரன்னில் தோற்றாலும், உண்மையில் இங்கு கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.