கிரிக்கெட் (Cricket)
டிரென்டிங்கான No Handshake: போட்டி முடிந்தபின் கை குலுக்காமல் சென்ற வீரர்கள்
- இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
- டாசிலும், போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்தனர்.
துபாய்:
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது..
எளிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை இந்திய வீரர்கள் தவிர்த்தனர். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இந்திய வீரர்கள் இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு அணி வீரர்களும் கை குலுக்காததால் No Handshake எனும் வார்த்தை டிரெண்டாகி வருகிறது.