ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: முதல் போட்டியிலேயே வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்ற கோயங்கா.. அங்கு கூறியது என்ன?

Published On 2025-03-25 15:27 IST   |   Update On 2025-03-25 15:27:00 IST
  • இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
  • பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. கடந்த வருடம் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் மெகா ஏலத்தை தொடர்ந்து லக்னோ அணிக்கு மாறியிருக்கிறார். இந்த தருணத்தில் தான் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் லக்னோ அணி 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து பந்துவீச்சிலும் விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் டெல்லி அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நாம் ஒரு இளம் அணி. எனவே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம்.

அந்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது.

என்று கோயங்கா கூறினார்.

Tags:    

Similar News