ஐ.பி.எல்.(IPL)

RCB Vs DC: ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கிய ஸ்டார்க்

Published On 2025-04-10 20:27 IST   |   Update On 2025-04-10 20:27:00 IST
  • ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது.
  • இந்த போட்டியில் ஸ்டார்க் ஒரே ஓவரில் 30 ரன்கள் கொடுத்தார்.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். முதல் ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்த ஆர்சிபி, 2-வது ஓவர் முடிவில் 23 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரை சால்ட் விளாசினார். முதல் பந்தில் 6, அடுத்த பந்துகள் முறையே 4,4,4,6 என பறக்க விட்டார். கடைசி பந்து லெக் பய்ஸ் முறையில் 5 ரன்களும் நோபால் முறையில் 1 விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் ஸ்டார்க் 30 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News