ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்

Published On 2025-04-17 23:19 IST   |   Update On 2025-04-17 23:19:00 IST
  • முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
  • அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மும்பை:

ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்னும், கிளாசன் 28 பந்தில் 37 ரன்னும், டிராவிஸ் ஹெட் 28 ரன்னும் எடுத்தனர். அனிகெட் வர்மா 8 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோகித் சர்மா 26 ரன்னும், ரிக்கல்டன் 31 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். வில் ஜாக்ஸ் 36 ரன் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா 21 ரன் எடுத்தார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் மும்பை அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.

Tags:    

Similar News