சிஎஸ்கே அணியில் இணையும் அதிரடி ஆல்ரவுண்டர்கள்: வெளியான குட் நியூஸ்
- தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டன் சிஎஸ்கே அணிக்கு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதியில் நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
அந்த வகையில் சில வீரர்களை டிரேட் முறையில் மற்ற அணிக்கு கொடுக்க ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதேபோல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் சிஎஸ்கே அணிக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சிஎஸ்கே அணிக்கும் மாற்ற பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணிக்கு மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் ஆகிய இரண்டு பேர் சிஎஸ்கே அணிக்கு வருவதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.