ஐ.பி.எல்.(IPL)
VIDEO: ரோகித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் - மனம் திறந்த ஜாஸ் பட்லர்
- பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
VIDEOஇந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமகாலத்தில் மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான் என்று ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் கடந்த சில ஆண்டுகளில் உங்களை மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? என்று ஜாஸ் பட்லரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பட்லர், "அது ரோகித் ஷர்மாதான். சிறப்பாக விளையாடி இந்திய அணியை நேர்த்தியாக வழி நடத்தினார். நான் ரோகித்தின் மிகப்பெரிய ரசிகன்" என்று தெரிவித்தார்.