ஐ.பி.எல்.(IPL)

ஒரே ஓவரில் 26 ரன்கள்: அரை சதம் விளாசிய ஆயுஷ் மாத்ரே

Published On 2025-05-03 22:09 IST   |   Update On 2025-05-03 22:09:00 IST
  • ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
  • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு:

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.

ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.

Tags:    

Similar News