கிரிக்கெட் (Cricket)

தனி ஆளாகப் போராடிய திலக் வர்மா: 2வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி

Published On 2025-01-25 22:34 IST   |   Update On 2025-01-25 22:34:00 IST
  • முதலில் ஆடிய இங்கிலாந்து 165 ரன்களை எடுத்தது.
  • அடுத்து ஆடிய இந்தியா 166 ரன்களை எடுத்து வென்றது.

சென்னை:

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பிரைடன் கார்ஸ் அதிரடியாக ஆடி 17 பந்தில் 31 ரன் எடுத்தார்.

இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 78 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் திலக் வர்மா அதிரடியாக ஆடின் அரை சதம் கடந்தார். 6வது விக்கெட்டுக்கு திலக் வர்மா-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 38 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இந்தியா 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 72 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Tags:    

Similar News