கிரிக்கெட் (Cricket)
null

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இந்திய வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்க கம்பீர் முடிவு

Published On 2025-10-07 11:47 IST   |   Update On 2025-10-07 11:47:00 IST
  • முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
  • 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், 2வது டெஸ்ட்டுக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சியாளர் கம்பீர் இந்திய வீரர்களுக்கு நாளை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்து அளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News