கிரிக்கெட் (Cricket)

முன்னாள் இந்திய கேப்டன் பெயருக்கான கோப்பைக்கு ஓய்வு அறிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

Published On 2025-04-01 11:54 IST   |   Update On 2025-04-01 11:54:00 IST
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
  • இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பட்டோடி கோப்பையை 'ஓய்வு' செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தொடரிலிருந்து இது நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வாகை சூடும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.

இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பையை ஓய்வு பெறுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளிலிருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.

Tags:    

Similar News