கிரிக்கெட் (Cricket)

மைதானத்தை உலரவைக்க UV லைட் யூஸ் பண்ணும் ஆஸ்திரேலியா எங்க!... ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணும் இந்தியா எங்க!

Published On 2025-10-22 12:30 IST   |   Update On 2025-10-22 12:30:00 IST
  • AUSvIND 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
  • ஓவல் மைதானத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 4 முறை மழை குறுக்கிட்டதால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்நிலையில், ஓவல் மைதானத்தில் மழை பெய்து வருவதால் மைதானத்தின் ஈரப்பதத்தை அகற்ற புற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் மைதானத்தின் ஈரப்பதத்தை போக்கி விரைவாக உலர வைக்கலாம்.

ஆஸ்திரேலியா அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மைதானத்தை உலரவைக்கும் நிலையில், பணக்கார கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் கொண்டு மைதானத்தை உலரவைக்கிறது என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பாஞ்ச் கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது. அதோடு உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. மேலும் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது.

அப்போதே பிசிசிஐ இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர். மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் சாடி இருந்தனர்.

ரூ.7000 கோடி சொத்து மதிப்பு கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் கவுன்சில் மைதானத்தை உலரவைக்க ற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தும் நிலையில், ரூ.20,000 கோடி சொத்துமதிப்பு கொண்ட பிசிசிஐ ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது ஏன்? என்றும் பிசிசிஐ-ன் வருமானம் என்று எல்லாம் எங்கு தான் செல்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News