செய்திகள்

ஒரே நேரத்தில் 2 பெண்களை மணக்கும் ரொனால்டினோ

Published On 2018-05-25 07:14 GMT   |   Update On 2018-05-25 08:44 GMT
பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#Ronaldinho
பிரேசிலியா:

பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம் பவான் ரொனால்டினோ.

2002-ம் ஆண்டு பிரேசில் அணி உலககோப்பையை வெல்ல இவரது ஆட்டம் முக்கியமாக இருந்தது.

38 வயதான ரொனால் டினோ ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். உலக கால்பந்து வீரர் விருதை பெற்ற அவர் பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை காதலித்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த 2 பெண்களும் ரொனால்டினோவுடன் ஒன்றாக வசித்து வந்தனர். தற்போது அவர்களை அவர் திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார்.

ரொனால்டினா இந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் மணக்கிறார். ஆகஸ்ட் மாதம் சான் டோமானிகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த திருமணம் நடக்கிறது.

ரொனாடில்னோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 பெண்களும் 2015-ம் ஆண்டு முதல் ரொனால்டினோவை காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.#ronaldhino
Tags:    

Similar News