2025 - ஒரு பார்வை

இடது - நேபாளில் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்ட பாராளுமன்ற கட்டடம்

2025 REWIND: ஆட்சி மாற்றங்களின் ஆண்டு.. தேர்தல் வெற்றிகள் முதல் ஆட்சிக் கவிழ்ப்புகள் வரை!

Published On 2025-12-18 13:53 IST   |   Update On 2025-12-18 13:53:00 IST
  • ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன.

ஆட்சி மாறும் ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதற்கேற்ப உலகெங்கிலும் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும் ஆட்சிக் கழிவிப்புகளும் இந்தாண்டு அதிகம் நிகழ்ந்தன. 

அவ்வாறு இந்தாண்டு நிகழ்ந்தவற்றை இங்கு பார்ப்போம்.

2025-ஆம் ஆண்டின் தொடக்கமே உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றார்.

வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய இறக்குமதி வரிகள்,கடுமையான குடியேற்றக் கொள்கைகள் என பல பரபரப்புகளை அவர் ஏற்படுத்தினார்.

ஜெர்மனி: ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியின் ஆளும் கூட்டணி அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2025-ல் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

ஓலாப் ஷோல்ஸின் (Olaf Scholz) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி வீழ்த்தப்பட்டது. பிரீட்ரிக் மெர்ஸின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மகத்தான வெற்றியைப் பெற்றது.

சிரியா: 2024 டிசம்பரில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் நீடித்து வந்த அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு  தொடக்கத்தில் புதிய இடைக்கால அரசு அமைந்தது.

சிரியாவின் அதிபராக அகமது அல்-ஷாரா பதவியேற்றார். கடந்த நவம்பரில் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் ஆசி பெற்று திரும்பினார்.

கனடா: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து ஏப்ரலில் கனடாவிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

ஏற்கனவே ஆட்சியில் இருந்த ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. பின்னர் மார்க் கார்னி கனடாவின் பிரதமரானார்.

ஆஸ்திரேலியா: இந்த ஆண்டு மே மாதத்தில் ஆஸ்திரேலியாவும் தேர்தலை நடத்தியது. தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது, ஆன்டனி அல்பானீஸ் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெலாரஸ்: 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெலாரஸிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். லுகாஷென்கோ தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சானே தகைச்சி 

ஜப்பான்: இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் கீழ்சபைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆளும் LDP கட்சி தோல்வியடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, LDP-யைச் சேர்ந்த சானே தகைச்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

நேபாள்: இந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில்,ஜென்-Z போராட்டங்களைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம் வீழ்ந்தது.

சர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி போராட்டமாக மாறி வன்முறையாக மாறி கடைசியில் ஆட்சியே மாறியது.

சார்மா ஒலி - சுஷீலா கார்க்கி 

தற்போது அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி சுஷீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது.

தாய்லாந்து: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதலை அடுத்து, முன்னாள் கம்போடியத் தலைவர் ஹன் சென்னுக்கும் தாய்லாந்து பெண் பிரதமராக இருந்த பேதோங்தான் சினவத்ரா இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல் கசித்தது.

பேதோங்தான் சினவத்ரா

இந்த சர்ச்சையில் தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் 2025 ஆகஸ்ட் 29 அன்று சினவத்ரா பிரதமர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, அனுடின் சார்ன்விரகுல், புதிய பிரதமராக 2025 செப்டம்பர் 7 அன்று பதவியேற்றார்.

பிரான்ஸ்: 2025-ல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான பிரச்னையால் பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார். 2025 அக்டோபர் நிலவரப்படி கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 6 பிரதமர்கள் பிரான்சில் மாறியுள்ளனர்.

தான்சானியா: இந்த ஆண்டு, அக்டோபர் 20, 2025 அன்று தான்சானியாவில் தேர்தல்கள் நடைபெற்றன. சாமியா சுலுஹு ஹாசன் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக நாட்டின் அதிபரானார்.

தான்சானியா வன்முறை

இருப்பினும், அவரது தேர்தலைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இவற்றில் சுமார் 700 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கேமரூன்: இந்த ஆண்டு அக்டோபரில் கேமரூனில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன, ஏற்கனவே இருந்த அதிபர் பால் பியா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

இதுதவிர்த்து ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன. ஜெர்மனி தேர்தலில் வலதுசாரி வெற்றி இதற்கு எடுத்துக்காட்டாகும். 

 ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் 

இந்த மாதம், தென் அமெரிக்க நாடான சிலியில் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின்தான்சானியாகம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.  

Tags:    

Similar News