புதுச்சேரி

பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவிப்பு

Published On 2025-06-15 19:05 IST   |   Update On 2025-06-15 19:05:00 IST
  • குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
  • ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.

குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News