புதுச்சேரி

புதுச்சேரி நகர பகுதியில் நாய் கறி விற்பனை?- போலீசார் விசாரணை

Published On 2025-08-08 14:04 IST   |   Update On 2025-08-08 14:04:00 IST
  • வெட்டப்பட்ட நாயின் கால்களை அங்கு உயிரோடு இருக்கும் நாய்களும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டு இருந்தது.
  • அசோக் ராஜ், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புதுச்சேரி:

புதுவை நேதாஜி சாலை ரெயில் நிலையத்தையொட்டி, மூங்கில் பொருட்கள் விற்பனை செய்து கொண்டு ஒரு குடும்பம் பல வருடங்களாக பிளாட் பாரத்தில் வசித்து வருகின்றனர்.

அவர்களுடன் நாய், பூனை குட்டிகள் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் காலை 8.30 மணி அளவில் வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் தலைவர் அசோக்ராஜ் அந்த பக்கமாக சென்றார்.

அப்போது அவர்கள் மாமிசத்தை வெட்டி கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த அவர் சோதனை செய்ததில் அது நாய் குட்டிகளின் மாமிசம் என்பது உறுதியானது. வெட்டப்பட்ட நாயின் கால்களை அங்கு உயிரோடு இருக்கும் நாய்களும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக் ராஜ், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மாமிசத்தை கைப்பற்றி, அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

நகர பகுதியில் அவ்வப்போது நாய், பூனை குட்டிகள் காணாமல் போவதாக வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ்க்கு தகவல் வந்த நிலையில், கையும் களவுமாக அவர்கள் பிடிபட்டது அதை உறுதி செய்கிறது. மேலும் இவர்கள் இந்த நாய், பூனை மாமிசத்தை தாங்கள் உண்ண சமைத்தார்களா, இல்லை பொது மக்களுக்கும் விற்பனை செய்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News