புதுச்சேரி

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணம் - அரசு முடிவு

Published On 2025-01-03 10:26 IST   |   Update On 2025-01-03 10:26:00 IST
  • பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை.
  • கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.500 ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News