இந்தியா

ஷர்மிளா

இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலுங்கானா, தலிபான் சந்திரசேகரராவ் - ஷர்மிளா கடும் தாக்கு

Published On 2023-02-19 21:52 GMT   |   Update On 2023-02-19 21:52 GMT
  • இந்தியாவில் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா மாநிலம் மாறி வருகிறது.
  • தலிபானாக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளார் என ஆந்திர முதல் மந்திரி சகோதரி கூறியுள்ளார்.

ஐதராபாத்:

ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சந்திரசேகர ராவ் சர்வாதிகாரி, கொடுங்கோலனாக உள்ளார். இங்கு இந்திய அரசியல் சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகர ராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார் என தெரிவித்தார்.

இதையடுத்து, ஷர்மிளாவைக் கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கொடும்பாவியை எரித்ததுடன் மாநிலத்தை விட்டு வெளியேறு என கோஷம் போட்டனர்.

Tags:    

Similar News