இந்தியா

ஓட்டல் தோசையில் கிடந்த 8 கரப்பான் பூச்சிகள்

Published On 2024-03-17 04:21 GMT   |   Update On 2024-03-17 04:21 GMT
  • இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர்.
  • சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஒரு ஓட்டலில் பரிமாறப்பட்ட தோசையில் 8 கரப்பான்பூச்சிகள் இருந்ததாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஷானி என்ற அந்த பெண் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு கடந்த 7-ந்தேதி சென்றுள்ளார். அங்கு பிளைன் தோசை ஆர்டர் செய்த அவருக்கு சிறிது நேரத்தில் தோசை பரிமாறி உள்ளனர். அதில், பல கரும்புள்ளிகள் இருப்பதையும், அவை கரப்பான் பூச்சிகள் என்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இஷானியும், அவரது தோழியும் தோசையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை வீடியோ எடுத்துள்ளனர்.

இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவை எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து இஷானி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் ஓட்டல்களில் தங்களுக்கு நேர்ந்த உணவு அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Tags:    

Similar News