தேர்தல் எங்கே? பாஜக தேசிய தலைவர் தேர்தலை விமர்சித்த காங்கிரஸ்
- பாஜக தேசிய தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக இருந்தது.
- நிதின் நபினை தவிர்த்து வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நேற்று மனுதாக்கல் நடைபெற்றது. நிதின் நபின் மட்டுமே மனுதாக்கல் செய்ததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று முறையாக முடிவு அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா கூறியதாவது:-
தேர்தல் எங்கே. நீங்கள் இதை தேர்தல் என்று ஏன் அழைக்கிறீர்கள்?. நீங்கள் முதலில் தலைவரை அறிவிக்கிறீர்கள். அதன்பின் தேர்தல் நடைபெறும் என சொல்கிறீர்கள். அதன்பின் தேர்தல் இல்லை.
இந்த தேர்தலில் தனக்கு பங்கு இல்லை. தன்னால் ஆதிக்கம் செலுத்தக்கூட முடியவில்லை. எந்தவிமான முறைகேடும் செய்ய முடியவில்லை என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய விரும்புகிறார்.
இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்தார்.