இந்தியா
மாணவியுடன் களரி பயிற்சியில் ஈடுபட்ட ராகுல் காந்தி #RahulGandhi
- மரியன் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்தார்.
- அங்கு தற்காப்புக் கலையான களரி பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரியன் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது, பழங்கால தற்காப்புக் கலையான களரி பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, களரி பயிற்சி செய்த மாணவியுடன் இணைந்து தானும் களர் பயிற்சி செய்தார் ராகுல் காந்தி.
மாணவியுடன் ராகுல் காந்தி களரி பயிற்சி செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.