இந்தியா

'வாக்கு திருட்டு' விழிப்புணர்வு: பீகாரில் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்

Published On 2025-08-14 04:30 IST   |   Update On 2025-08-14 04:30:00 IST
  • தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
  • இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த திங்கள்கிழமை, பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 250 எம்பிக்கள் பாதி வழியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் இதை உறுதிப்படுத்தி உள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை பேரணி நடைபெற உள்ளது. இதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் வரைவு பட்டியலில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இந்த நடைபயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags:    

Similar News