இந்தியா

விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'பால புரஸ்கார் விருது': சாகித்ய அகாடமி

Published On 2025-06-18 17:04 IST   |   Update On 2025-06-18 17:13:00 IST
  • தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News