இந்தியா

புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு

Published On 2025-06-20 15:31 IST   |   Update On 2025-06-20 15:31:00 IST
  • இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக நடவடிக்கை.
  • தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தகவல்.

வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக வாங்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களுடன் இரண்டு BIS (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பொருந்தும், இதன்மூலம் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கை பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News