இந்தியா
- என்.பி.சி.ஐ. நிறுவனம் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியாவுடன் கைகோர்த்துள்ளது.
- செயற்கை நுண்ணறிவு வசதிகளை புகுத்த என்விடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் தேசிய நிறுவனமாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ.) உள்ளது.
யு.பி.ஐ. சேவையை அறிமுகப்படுத்தி நாட்டின் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பழக்கப்படுத்திய என்.பி.சி.ஐ. நிறுவனம் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியாவுடன் கைகோர்த்துள்ளது.
அதன்படி யு.பி.ஐ. செயலியை மேலும் மேம்படுத்தி செயற்கை நுண்ணறிவு வசதிகளை புகுத்த என்விடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.