இந்தியா

பஞ்சாபில் மற்றொரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை

Published On 2026-02-18 18:28 IST   |   Update On 2026-02-18 18:28:00 IST
  • மூன்று மர்ம நபர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
  • ஒரு மாதத்திற்குள் இது 2-வது கொலையாகும்.

பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஹர்பிந்தர் சிங் என்ற ஆம் ஆத்தி கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் திருமண விழாவிற்கு சென்றபோது அடையாளம் தெரியாத 3 நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் லால்ஜித் சிங் புல்லாருக்கு நெருக்கமானவர் என கிராம மக்கள் தெரிவித்துள்ளது.

மர்ம நபர்கள் ஏ.கே.47 துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. ஹர்பிந்தர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உறவினர் படுகாயம் அடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்து்ளளனர்.

மேலும், குற்றவாளிகளை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News