இந்தியா

தங்கம் கொள்ளை வழக்கு - சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு ஜாமின்

Published On 2026-02-19 07:50 IST   |   Update On 2026-02-19 07:50:00 IST
  • கடந்த 41 நாட்களாக சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
  • தந்திரி கண்டரரு ராஜீவருவின் ஜாமின் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது.

சபரிமலையில் துவார பாலகர் சிலை தங்கம் மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான 2 வழக்குகளில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 41 நாட்களாக சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. 41 நாட்களில் 2 முறை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று தந்திரி கண்டரரு ராஜீவருவின் ஜாமின் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது தந்திரி தரப்பில், தங்கம் கொள்ளையில் தந்திரிக்கு தொடர்பு இல்லை. மேலும் சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைவை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி. தங்கம் கொள்ளையில் தந்திரிக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை சிறப்பு விசாரணை குழு தரப்பில் ஆஜர்படுத்தவில்லை என்ற அடிப்படையில், தந்திரிக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News