இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள்- 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு மணல் சிற்பம்

Published On 2022-09-17 04:20 GMT   |   Update On 2022-09-17 04:20 GMT
  • ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு மணல் சிற்பம்.
  • தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக் காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தினோம்.

பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை வித்தியாசமான முறையில் மணல் சிற்பமாக செதுக்கி இருக்கிறார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

அதன்படி, பட்நாயக் 1,213 தேநீர் கோப்பைகளை நிறுவி "ஹேப்பி பர்த்டே மோடி ஜி" என்ற வாழ்த்துடன் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து பட்நாயக் கூறுகையில், " பிரதமர் மோடியின் தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக் காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி சிற்பம் உருவாக்கியுள்ளேன். இங்கே எனது கலையின் மூலம் பிரதமருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்" என்றார்.

Tags:    

Similar News