இந்தியா
ஜம்மு காஷ்மீரில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை
- காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.
- சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அருகே பாம்பூரில் காவல் உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் மீதான தாக்குதல் நேற்று இரவில் பாம்பூர் பகுதியில் உள்ள சம்பூரா என்ற இடத்தில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23-வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.