இந்தியா

காங்கிரசின் 2-வது வேட்பாளர் பட்டியல் குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசனை

Published On 2023-04-02 03:54 GMT   |   Update On 2023-04-02 03:54 GMT
  • சட்டசபை தேர்தல் பிரசாரம், கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
  • 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் பாக்கி உள்ள 100 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் இடையே பலத்த போட்டியிட்டுள்ளது. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-க்கும் அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வருகின்றனர்.

இதனால் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, அவரது வீட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது 2 பேரும், சட்டசபை தேர்தல் பிரசாரம், வருகிற 9-ந் தேதி கோலாருக்கு ராகுல் காந்தி வருகை, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 2-வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிட மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News