இந்தியா

ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகொலை

Published On 2023-05-24 05:57 GMT   |   Update On 2023-05-24 05:57 GMT
  • ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உறவினர் ஒருவருக்கும் குருதேவ் பக்குக்கும் வீடு கட்டுவது சம்பந்தமான நிலப்பிரச்சினை இருந்து வந்ததும் இதன் காரணமாக அவர் 4 பேரையும் கடப்பாரையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News