இந்தியா

ராகுல் காந்தி

எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருப்பது எதிர்காலத்தில் மோதலை உருவாக்கும்- ராகுல்காந்தி எச்சரிக்கை

Published On 2022-06-10 09:22 GMT   |   Update On 2022-06-10 09:49 GMT
  • இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிகாலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும்.
  • ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை சீனா மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

புதுடெல்லி:

இந்திய எல்லைபகுதியான லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக அமெரிக்க ரானுவ அதிகாரி தெரிவித்து இருந்தார். இதை நிரூபிக்கும் வகையில் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

தனது படைகளின் எண்ணிக்கையையும் சீனா அதிகரித்து வருகிறது. பதட்டத்தை தவிர்க்க அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாக இந்திய ரானுவ தளபதி நரவானே தெரிவித்து இருந்தார் ஆனாலும் சீனா தனது அத்துமீறலை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்தநிலையில் ராகுல் காந்தி எம்.பி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிகாலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும்.

ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை சீனா மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் அமெரிக்கா அதிகாரி கூறிய கருத்து களையும் சுட்டிகாட்டி உள்ளார்.

Tags:    

Similar News