இந்தியா

அன்றே சொன்னார்! GST விவகாரத்தில் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்த ராகுல் காந்தி

Published On 2025-09-04 13:41 IST   |   Update On 2025-09-04 13:41:00 IST
  • ராகுல் காந்தி, 2016-ம் ஆண்டு பதிவு செய்த எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
  • ஜிஎஸ்டி விகிதத்தில் 18% உச்சவரம்பு என்பது அனைவரின் நலனுக்காகவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களால் சிலருக்கு நன்மையும், சிலருக்கும் தீமையும் ஏற்படுகிறது. இது சிலரது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் அரசியலிலும் நிகழத்தான் செய்கிறது.

ஆளும் கட்சி குறித்து எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசும் பிரச்சனைகள், ஆளுங்கட்சியான பிறகு எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இது சிலருக்கு நன்மையாகவும் இருந்திருக்கிறது. சிலருக்கு தீமையாகவும் இருந்திருக்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கு அரசியல் கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இதுபுறம் இருக்க... நல்லது யார் சொன்னாலும், செய்தாலும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழையும் பொழியத்தான் செய்கிறது.



அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 2016-ம் ஆண்டு பதிவு செய்த எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில், இன்று ஜிஎஸ்டி கவுன்சில் தனது விவாதங்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஜிஎஸ்டி விகிதத்தில் 18% உச்சவரம்பு என்பது அனைவரின் நலனுக்காகவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். அது தற்போது வைரலாகிறது.

காரணம், நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரி விகிதம் 18 சதவீதம் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது தான். 

Tags:    

Similar News